PAR00-INDEX
 
பரமார்த்த குரு கதைகள் (Paramartha Guru Stories)இத்தாலியில் பிறந்து, கிறித்துவமதம் பரப்ப இந்தியா வந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் பெயர்பெற்ற இவர், இந்தியா வந்து தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்று, வீரமாமுனிவர் என்ற பெயரில் தமிழில் நிறைய உரைநடைகளை கிறித்துவ மதபோதனைகள் கொண்ட நூல்களை வெளியிட்டார். இவரின் “தேம்பாவணி” எனும் காப்பியம் புகழ்மிக்கது. இவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில், திருக்குறள்,தேவாரம்,திருப்புகழ் மற்றும் ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை இலத்தீன் மற்றும் பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்தார்.
அந்தசமயத்தில் ஐரோப்பியதேசத்தில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக்கதைகளைத் தழுவி, தமிழ் கலாச்சாரத்தன்மையில் இவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகள், அவற்றின் நகைச்சுவைத் தன்மையால் புகழ்பெற்று பல இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.


பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. தமிழில் முதலில் வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஒரு வெகுளி குருவும் (பரமார்த்த குரு) அவனுடைய ஐந்து சீடர்களான மட்டி, மடையன், பேதை, மிலேச்சன் மற்றும் மூடன் செய்யும் செயல்களால் பெரும் அனுபவங்களையே, பரமார்த்தகுரு கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது. பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது…
அக்கதைகளை நான் தொகுத்தளிக்க உள்ளேன்….
இனி கதை ஆரம்பம்